" ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்."
இப்பாடலில் இருந்து நம் முன்னோர் கலைகளை அறுபத்துநான்கெனப் பகுத்துள்ளனர் என்பதனை அறிகின்றோம். இக்கலைகளை சாதாரண கலைகள் என்றும், நுண்கலைகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவற்றுள் சங்கீதம், நடனம், சித்திரம், சிற்பம் போன்றவை நுண்கலைகளுள் அடங்கும். இக்கலைகள் உள்ளத்தில் ஒருவகை உணர்வை உண்டுபண்ணி இன்பமளிக்க வல்லவையாகும்.
இக்கலைகளுள் இசைக்கலை மிக உன்னதமமான உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. கேட்பவரின் உள்ளத்தை இசைவிப்பதால் இக்கலைக்கு இசைக்கலையெனப் பண்டையோர் பெயர் வைத்தமை சாலவும் பொருந்தும். ஏனைய கலைகளை கற்றறிந்தவர்களும் இசையை கண்டும், கேட்டும் அனுபவிக்க முடியும். இசைக்கலை ஒன்றினையே கற்றோர், கல்லாதோர் என எவ்வித வேறுபாடுமின்றி அனுபவிக்க முடியும்.
மானிடரல்லாத பல உயிரினங்களும் பச்சிளம் பாலகர்களும் பாட்டின் பொருள் உணர்ந்து நயப்பதில்லை. பாடலின் ஒலி நயத்தைக் கேட்டே நயக்கின்றனர். மொழி எதுவாக இருந்தபோதிலும் அம்மொழியினரின் இசை கேட்டு நயக்க முடியும். இதற்கு எடுத்துக் காட்டாக தியாகராஜஸ்வாமிகளின் தெலுங்கு உருப்படிகள் யாவற்றையும் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் தென்னிந்திய மக்கள் எல்லோரும் கேட்டு மகிழ்கின்றனர். இருந்தும் இசை கற்கும் சிறுவர்களாகிய நாம் முதலில் சிறிய பாடல், நாட்டுப்பாடல், வர்ணம் ஆகிய பாடல்களை தழிழ் பாடல்களாக கற்றுக் கொள்வது இலகுவாகவும், நன்மை தருவதாகவும் இருக்கும்.
இக்கலைகளுள் இசைக்கலை மிக உன்னதமமான உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. கேட்பவரின் உள்ளத்தை இசைவிப்பதால் இக்கலைக்கு இசைக்கலையெனப் பண்டையோர் பெயர் வைத்தமை சாலவும் பொருந்தும். ஏனைய கலைகளை கற்றறிந்தவர்களும் இசையை கண்டும், கேட்டும் அனுபவிக்க முடியும். இசைக்கலை ஒன்றினையே கற்றோர், கல்லாதோர் என எவ்வித வேறுபாடுமின்றி அனுபவிக்க முடியும்.
மானிடரல்லாத பல உயிரினங்களும் பச்சிளம் பாலகர்களும் பாட்டின் பொருள் உணர்ந்து நயப்பதில்லை. பாடலின் ஒலி நயத்தைக் கேட்டே நயக்கின்றனர். மொழி எதுவாக இருந்தபோதிலும் அம்மொழியினரின் இசை கேட்டு நயக்க முடியும். இதற்கு எடுத்துக் காட்டாக தியாகராஜஸ்வாமிகளின் தெலுங்கு உருப்படிகள் யாவற்றையும் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் தென்னிந்திய மக்கள் எல்லோரும் கேட்டு மகிழ்கின்றனர். இருந்தும் இசை கற்கும் சிறுவர்களாகிய நாம் முதலில் சிறிய பாடல், நாட்டுப்பாடல், வர்ணம் ஆகிய பாடல்களை தழிழ் பாடல்களாக கற்றுக் கொள்வது இலகுவாகவும், நன்மை தருவதாகவும் இருக்கும்.

No comments:
Post a Comment